கலாபன் கதை 4


இந்தியாவே கடலால் விழுங்கப்பட்டதுபோல்..

கஷ்ரங்களின் ஒவ்வொரு முடுக்கிலும் அவள் புன்னகையுடன் நின்று அவனை பித்தேற்றிக்கொண்டிருந்தாள். அந்த அழகும், அளவுகளும், குறுஞ்சிரிப்பும் அவனடைந்த உடல் மன வாதைகளையெல்லாம் ஆவியாய்க் கரைய வைத்தன. அவளையே உரித்துக்கொண்டு பிறந்திருந்த குழந்தைவேறு அவனது தொடரும் வாழ்வுக்கான புதிய அர்த்தம் சொல்லி குமிழ்ந்தெழும் சிரிப்புகளுக்குள் அவனை கிறங்கி நடக்கவைத்துக் கொண்டிருந்தது.

க~;ரமென்பது உறுதலில் அடையப்படுவதில்லை. அதற்கொரு உளவியல் இருக்கிறது. க~;ரத்தை க~;ரமாக நினைக்காவிட்டால், க~;ரமென்பது க~;ரமாகத் தெரியாது என்று சீனப் பெரு ஞானியான தாவோ சொல்வான். தாவோ கடவுளில்லை, மனிதனில்லை, ஒரு கருத்துருவம் என்கிறது நவீன சிந்தனை. ஓடுகிற ஓட்டத்தோடு எல்லாம் அறிந்துகொண்டு கலாபன் தாவோ ஞானத்தில் ஒரு வழிக்குட்பட்டதாய் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டிருந்தான். க~;ரங்கள் அவனுக்குச் சுவைத்த விதம் இவ்வாறுதான் நிகழ்ந்தது.

கலாபன் இரண்டாவது கப்பல் ஏறி ஓராண்டு ஆகிக்கொண்டிருந்தது. அந்த ஓராண்டில் நான்கு தடவைகள் நாற்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு முறை எண்பதாயிரமென்று ஏறக்குறைய இரண்டு லட்சம் ரூபாவுக்குமேல் மனோவுக்கு அனுப்பிவிட்டிருந்தான். அந்த முறை விடுப்பிலே ஊர் செல்லும்போது வீட்டுக் கட்டுமானப் பணியைத் தொடக்கிவிட்டு வருவது என்று அவளோடு கடிதத்தில் கலந்துபேசி முடிவாகியும்விட்டது.

ஊரிலே நல்ல ஒரு காணி விலைக்கு வந்திருக்கிறது, மலிவாக வாங்கிக்கொள்ளலாம் என தாயார் எழுதியதற்கும், தனக்கு அப்போதைக்கு இருக்கிற காணி போதுமென்றும், வீடு கட்டுவதே முக்கியமானதென்றும் அவள் மனம் நோகாதவாறு கடிதமெழுதிவிட்டான். அவனது ஒவ்வொரு மூச்சும் வீடுகட்டும் தீர்மானத்தின் நிறைவேற்றத்துக்காகவே விடப்பட்டுக்கொண்டிருந்தது என்றுகூடச் சொல்லிவிடலாம்.

அதற்காக அவன் வெல்லவேண்டியிருந்தவை தன்னையும், தனது ஆசைகளையும் மட்டுமாயிருக்கவில்லை, தனது பயத்தையும்கூடவாகவே இருந்தது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு பயணம் தொடங்குவதுபோல, மரணத்தை அருகிலே வைத்துக்கொண்டுதான் வாழ்க்கைக்கான ஆதாரங்களைத் தேடவேண்டியிருந்த தொழிலாக இருந்தது அது.
அது ஒரு தொழில்தானா என்று அவனுக்குள்ளேயே கேள்வி உண்டு. அது ஒரு பொருள் தேடலின் யாத்திரை என்றுதான் அவனது நண்பன் சாந்தன் ஒருமுறை சொன்னான். ஓப்புக்கொண்டு இருக்கிற போதில், டீ.ழு.வு லண்டன் பரீட்சை எடுத்து அங்கு வேலைபார்க்கும் தனது பிரதம கப்பல் என்ஜினியருக்கும் அது யாத்திரைதானா என்ற வினாவெழுந்தது. கப்பலின் கப்ரின் தனது நாடாகிய கிரேக்கத்தில் ஆ.ழு.வு பட்டம் பெற்றவன். ரேடியோ ஒஃபீசர் ரொலாண்டோ, சர்வதேச அங்கீகாரமுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ரேடியோ ஒஃபீசர் தகுதி பெற்றிருந்தவன். ஒரு நாட்டின் துறைமுகத்துக்குள் ஒரு கப்பல் நுழையவேண்டுமெனின், கப்பல் ஏதாவது ஒரு நாட்டில் அதன் பயணத் தகுதிகுறித்த சான்றிதழ் பெற்றிருக்கவேண்டியது மட்டுமல்ல, கப்பல் அதிகாரிகள் தமது தகுதியை நிரூபிக்கும் சான்றிதழ்கள் பெற்றவராய் இருப்பதும் அவசியமாகும். இத்தகு எண்ணங்கள் சாந்தனின் கருத்தைத் தகர்த்து விட்டுவிடும். பின்னர் தன் போன்ற உடலுழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டோருக்கு அது யாத்திரையாக இருந்தாலும், அதைக் கல்வி வழியில் பட்டங்கள் பெற்று அடைந்தவர்களுக்கு தொழில்தான் என்று அவன் தீர்மானம் எடுத்திருந்தான். அதன் மேல் தன்போன்றவர்களது உழைப்புச் செலுத்துதலையும் அவன் யாத்திரையென்ற ஒற்றைப் பரிணாமத்தில் பார்ப்பதைத் தவிர்த்தான்.

அவனுக்கு அப்போது அதிகாலை நான்கிலிருந்து எட்டு மணிவரையான வேலையாகியிருந்தது. இரண்டாவது என்ஜினியரோடு வேலைசெய்தான். எட்டு மணிக்கு என்ஜின் கண்காணிப்பு வேலை முடிய எட்டு மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை மேலதிகமாக நான்கு மணிநேர பகல் வேலையும் செய்தான். கை நிறையத்தான் உழைத்தான். மனம்வைத்து உழைத்தான். உழைத்ததை ஊதாரித்தனமாக வேசைகளிடத்திலும், குடியிலும், டிஸ்கோகளிலும் என்று செலவழிக்காமல் ஒறுப்பாய்ச் செலவழித்து காசை மிச்சம் பிடித்தான். மிச்சம் பிடித்ததை மனைவியை வங்கிக் கணக்கு எடுக்கவைத்து வங்கிக்கே நேரடியாக அனுப்பினான். வீட்டுக்குச் செலவுக்குத் தேவையான பணத்தைமட்டும் எடு, மீதியை வங்கிக் கணக்கிலேயே வைத்திரு என்று எப்போதும்போல் ஒவ்வொரு தடவை பணம் அனுப்புகிறபோதும் அவன் தவறாது கடிதத்தில் எழுதிக்கொண்டேயிருந்தான்.
இரண்டாவது என்ஜினியரோடு பழக்கம் அதிகமாகியிருந்ததில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஒரு மாத விடுப்பில் வீடு போய்விட்டு அதே கப்பலுக்குத் திரும்பிவருகிற வாய்ப்பும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் தன் ஆசைகளை அடக்கிக்கொண்டு ஒரு துறவிபோல் அவன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான்.

சமுத்திரங்கள் தம்முள்ளே தமக்குள் எது பெரியது, எது பயங்கரமானது என்பதை அறிய தமக்குள்ளேயே முட்டிமோதிக்கொள்ளும் என்று எப்போதாவது அவன் கற்பனையில்கூட யோசித்துப் பார்த்ததில்லை. ஆனால் அந்தமுறை தூரகிழக்கிலிருந்து கப்பலின் தென்னாபிரிக்காவைநோக்கிய பயணத்தில் இந்துசமுத்திரமும் அத்திலாந்திக் சமுத்திரமும் சேரும் தென்னாபிரிக்காவின் கீழ் முனையில் வானை முட்டுமளவுக்கு அலைகள் எழுந்து விழுந்துகொண்டிருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் ஆபிரிக்க முனையைச் சுற்றி இந்தியாவை, பொதுவாக ஆசியாவை, அடைய எடுத்த அத்தனை கடற் பயண முயற்சிகளும் இடைமுறிந்து போக, 1492இல் வாஸ்கோ டி காமா என்றவனின் முயற்சிதான் வெற்றிபெறுகிறது. கடந்து செல்ல முடியாது என்றிருந்த பயங்கரத் தென்னாபிரிக்க முனையைக் கடந்து அவன்தான் நன்னம்பிக்கை முனையென அம்முனைக்குப் பெயரிட்டான். ஆயினும் நன்னம்பிக்கை முனை நம்பிக்கைகளைச் சிதறவைக்கும் முனையாகவே அன்றுவரை இருந்துகொண்டிருந்தது.

அவை எச் சமுத்திரத்தின் அலைகள்? நிலக்கூறுகள்போல சமுத்திரத்தைக் கூறுபோட்டுவிட முடியுமா? பூகோளம் சொல்லிற்று அது இந்துசமுத்திரத்தின் ஆகக்கூடிய தென்பிராந்தியமென்று. ஆனால் அத்திலாந்திக் சமுத்திரம் அதனை ஓடஓட விரட்டிவிட்டு அந்த இடத்தில் தான் அமர்ந்துவிடுவதற்குப்போன்ற அத்தனை மூர்க்கத்தில் இரைந்து பாய்ந்துகொண்டிருந்தது. விலகியோடிய இந்து சமுத்திரமும் சளைத்திருக்கவில்லை. ஓடி ஒதுங்குவதாய்ப் போக்குக் காட்டிவிட்டுப்போல் விலகி, மறுபடி பத்து மடங்கு மூர்க்கத்தோடு திரும்பப் பாய்ந்துகொண்டிருந்தது. நேர்நேர் மின்காந்த அணுக்களின் மோதுகையில் மின்னல் பிறப்பதுபோல், இரு சமுத்திரங்களின் நேர்நேர் மோதுகையில் பிரளயம் பிறந்தது. அந்தப் பிரளயத்தில் கப்பலும் கப்பலும் மோதும் கடல் விபத்துக்கள் நடந்தன. கப்பல்கள் சில நொருங்கி மூழ்கின. கடற் பயணத்தில் சாத்தியமாகக்கூடிய அத்தனை அழிவுகளும் அந்தத் தென்னாபிரிக்க முனையில் நிகழ்ந்தன.
டர்பன் துறைமுகத்தில் வைத்துத்தான் அந்தக் கடற் சூறாவளியின் அச்ச வாடை மறைவதின் முன்னர் அடுத்தமுறை கப்பல் திரும்ப ஆசிய வருகிறபோதில் தான் வீடு வரவிருப்பதாக மனோவுக்கு கடிதம் எழுதினான் கலாபன்.

அங்கேதான் தமிழ் கொஞ்சம் பேசத் தெரிந்த, தமிழ்ச் சினிமாப் பாட்டுக்களையே வானொலியிலும், ரேப் ரிக்கோடரிலும் எந்நேரமும் கேட்கிற ஒரு தமிழ் ராக்சி ட்ரைவரை அவன் சந்தித்தது. அந்நாளில்தான் காந்தி நடந்த தெருக்கள் என்றும், காந்தி வசித்த வீடென்றும் சில இடங்களையேனும் அந்த டாக்சி ட்ரைவர் அவனுக்குக் காட்டினான்.
சில தினங்கள் டர்பனில் தங்கிய பின் கப்பல் மறுபடி அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கிழித்துச் செல்லும் தென்னமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டது. அம்முறை அவர்களின் பயண இடம் கொலம்பியாவாக இருந்தது.

மழையையும் வாழைத் தோட்டங்களையும் தவிர கொலம்பியாவில் பார்த்ததாய் எதுவுமே கலாபனின் ஞாபகத்தில் இல்லை.

அங்கிருந்து ஏறக்குறைய ஒரு கிழமையில் கப்பல் பயணம் தொடங்கியது. முதலில் வடஅமெரிக்காவென்றும், பிறகு அங்கிருந்து ஜப்பானென்றும் அறியவந்தது.
கப்பலில் ஒஃபீசர் மெஸ், குறூ மெஸ் என்று இரண்டு சாப்பாட்டு இடங்கள் உண்டு. கலாபன், சாந்தன், லால் பெரேரா போன்றோர் குறூ மெஸ்ஸில் சாப்பிடுவார்கள். ரேடியோ ஒஃபீசர், இரண்டாம் மூன்றாம் நிலை என்ஜினியர்கள், சீஃப் ஒஃபீசர் மற்றும் இரண்டாம் மூன்றாம் நிலை அயவநகள் ஒஃபீசர் மெஸ்ஸில் சாப்பிடுவார்கள். ஆயினும், மார்க்கோனி சாப்பாடு முடிய குறூ மெஸ்ஸ{க்கு வந்துவிடுவான். கலாபன் ஆதியோருடன் நல்ல ஒட்டுதல் இருந்தது அவனுக்கு. கப்பல் பயண புதினங்கள் பரிமாறப்படுகிற இடமும் வேளையும் அதுதான். அவன்மூலமாகவே பயண விபரங்கள் கலாபன் ஆதியோருக்குத் தெரியவந்துகொண்டிருந்தன.

பெரும்பாலும் அதிவிசே~ங்களின்றியே அமெரிக்கத் துறைமுகமான சியாட்டிலின் கடற்பயணம் இருந்தது. சியாட்டில் பசுபிக் சமுத்திரத்தின் வாடைகூட எட்டாத இடத்தில் இருந்தது. ஆனாலும் ஜூவான் டி புகா என்ற தொடுவாயின் ஊடான தொடுப்பினால் பயங்கரத்தின் தாக்கம் சிறிதாகவேனும் இருக்கவே செய்தது. கடலற்ற சியாட்டில் துறைமுகத்தின் கடற்பாதை ஜூவான் டி புவாதான்.
துறைமுகத்துள் புகுந்த எம்.வி. எலியாஸ் அன்ஜிலாகோஸ் என்ற கப்பல் அதேயளவு பிரமாண்டம்கொண்ட எம்.வி.சந்திரகுப்த என்ற இந்தியக் கப்பலின் பின்னால் கட்டப்பட்டது. இரண்டொரு நாட்களுக்குள்ளேயே அங்கு வேலைசெய்த ஒரு தமிழ் கப்பலோட்டியோடு பழக்கமேற்பட்டு, கலாபனும் மற்றுமிரு இலங்கையரும் அந்தக் கப்பலுக்கு ஒருமுறை சென்று வந்தனர்.

கலாபன் வேலைசெய்த எம்.வி.எலியாஸ் அன்ஜிலாகோஸின் வசதிகள் எம்.வி.சந்திரகுப்தவில் இல்லாவிட்டாலும், அது கலாபனுக்கு மிகவும் பிடித்துப்போயிருந்தது. இந்தியாவே அந்தக் கப்பலுக்குள் வாழ்வதுபோன்ற பிரமையிலிருந்தான் அவன். பல்வேறு தேசிய இனங்கள் வேலைசெய்த ஒரு நாட்டின் கப்பலாக அது இருந்தது. பஞ்சாபிகள், மலையாளிகள், தமிழர், வங்காளி, குஜராத்திகள் என அத் தேசிய இனக் கலப்பு மிகுந்த சந்தோ~த்தைக் கொடுத்தது. மேல்நாட்டு நங்கையரையே பார்த்தலுத்த கண்களுக்கு சேலையுடன் நடமாடிய இந்திய கப்பல் ஊழியரின் மனைவியர் விரகமற்ற குளிர்ச்சியை மனத்துக்கு அளித்தனர். அவர்களது குழந்தைகள்வேறு காண்போரின் குடும்ப தவனங்களை அடக்குவனவாய். அங்கே ஒரு திரைப்படக் கூடமொன்றும் இருந்தது. கலாபனாதியோர் சென்ற பொழுதில், மிதுன் சக்கரவர்த்தி நடித்த ஒரு இந்தித் திரைப்படம் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தமிழ்ப் படமும் சிலவேளை காண்பிப்பார்கள் என்று சொன்னான் தமிழ்க் கடலோடி. கலாபனின் கப்பலில் உள்ள மொத்தத் தொகையே இருபதுக்குள்தான். ஆனால் இந்தியக் கப்பலில் எழுபத்தாறு பேர்கள் இருந்தார்களாம். போதையாயிருந்த ஒரு பொழுதில் லால் சொன்னான், எம்.வி.சந்திரகுப்தவுள் ஒரு ‘சிமோல் இந்தியா’வே இருப்பதாக.
மனம் கழித்துக்கொண்டிருந்தபோதில் காலநிலை சீரகேடடைந்துகொண்டிருந்தது. ஜூவான் டி புவாவை ஊடறுத்து கடலின் கொந்தளிப்பு சியாட்டில் துறைமுகத்தை அடைந்துகொண்டிருந்தது. அந்தமுறை கடற்பயணம் மீண்டும் ஓர் உயிரச்சத்தை ஏற்படுத்தும் பயணமாக இருக்கப்போவதாக எதுவுமேயில்லை, அவர்களது மனங்களே சூசகம் சொல்லிக்கொண்டிருந்தன.

ஆனாலும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளிலும் நேரத்திலும் கப்பல் புறப்பட்டது. கலாபனாதியோருக்கு ஏனோ மனத்தில் ஒரு தெம்பு. இந்தியக் கப்பல் அவர்களது கண்களுக்கு எட்டும் தூரத்திலேயே பயணத்தைத் தொடங்கிச் சென்றுகொண்டிருந்தது.
ஏறக்குறைய பசுபிக்கை இரண்டாக வெட்டியோடும் பயணம் அது. இந்தியக் கப்பலின் பயணமும் ஜப்பான்தான் என்றறிந்ததால், முன்னே கடல்வெளியில் பார்வை படும்படியாக அது சென்றுகொண்டிருந்தமை ஒரு மனத்தைரியத்தை எலியாஸ் அன்ஜிலாகோஸ் பயணிகளுக்கு அளித்திருந்ததில் ஆச்சரியப்பட எதுவுமிருக்கவில்லை.

இரண்டு நாட்களாயின, மூன்று நாட்களாயின… கடல் தன் போக்கு மாறவேயில்லை. கூடிய இராப்பொழுதுப் பருவமான அது, மேலும் திணிந்து திணிந்து பகலையும் கவிய ஆரம்பித்துவிட்டது. பகல் பதினொன்றுக்கும் மதியத்தின்மேல் இரண்டு மணிக்குமிடையில் சிறிது சூரியக் கதிர் தெரிந்தது. பின்னால் இருட்டும், குளிரும், காற்றும்தான். இந்த நிலையில் தூரத்தே சென்றுகொண்டிருந்த எம்.வி.சந்திரகுப்தவின் மங்கிய தோற்றமும் காணப்பட முடியாததாயிற்று.
கப்பல் ஊழியர்கள் கலகப்பட ஆரம்பித்தார்கள். அதே பாகையில் தொடர்ந்தும் பயணம் செய்வதால் ஏற்படக்கூடிய பாதகங்களையும் வசதியீனங்களையும் எண்ணாமல், எண்ணெய்ச் செலவை மீதமாக்கவும் குறிப்பிட்ட தேதியில் ஜப்பான் துறைமுகமான ஒசாகாவை அடையவும் கப்பரின் கொண்டிருந்த தீர்மானம்பற்றி எல்லார் வாயிலும் புகார். அதிகாரிகள் நிலையிலுள்ளோர் அவ்வாறு வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர எண்ணாமலும் இருந்திருப்பார்களா என்பதை அறுதியிட முடியாது. கப்பல் சென்றுகொண்டிருந்த திசைப்பாகை மாறாமலேதான் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்த சாதாரண கப்பல் ஊழியர்கள் வெளிப்படப் பேசினார்கள். தங்கள் கோபத்தை வெளிப்படக் காட்டினார்கள். கப்ரினுக்கு ஏவல்வேலை செய்ய இருந்த கப்ரின் போய் (ஊயிவயin டிழல) கப்ரினுக்குப் பணிவிடை செய்யாமல் கபினுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தான். காலநிலையை, இன்னும் எத்தனை நாள் பயணம் தொடரவேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லக்கூடிய மார்க்கோனியும் கீழே வருவதை நிறுத்திவிட்டதில், கலாபன் போன்றோரால் சேதி எதையும் அறியமுடியாது போய்விட்டது. தகவலெதுவும் அறிய முடியாத நிலையில் பயம் மேலும் பயமாக, அது இன்னுமின்னுமான உயிரச்சமாக வளர ஆரம்பித்துவிட்டது. மேலும் ஒரு கிழமை ஆகியது. கப்பல் பயணத்தின் திசைப் பாகை மாறவில்லை. கடலோ தன் கடூரம் கொஞ்சமும் குறையாமலே இருந்துகொண்டிருந்தது.

ஒரு மதியத்தில் குறூ மெஸ் பக்கமாக கப்ரின் வந்தபோது, வழக்கம்போல் யாரும் வந்தனம் சொல்லவில்லை. நிமிர்ந்து பார்கவுமில்லை. அவன் வந்ததான பாவனையே காட்டவில்லை.
சிறிதுநேரம் நிலைகுத்தி நின்றிருந்த கப்ரின் எதிரே அமர்ந்திருந்த கலாபனைநோக்கி வந்தான். ‘ஏன் எவரும் என்னோடு பேசுகிறீர்கள் இல்லை. என்ன நடந்தது உங்களுக்கு’ என்று அழாக்குறையாகக் கேட்டான்.

பேச மனதில்லாதிருந்தது யாருக்கும். ஆனாலும் கலாபன் மனத்தைத் திடமாக்கிக்கொண்டு, ‘நீ கம்பெனி நன்மைக்காக போக்குத் திசையை மாற்றாமலே கப்பலைச் செலுத்திக்கொண்டிருக்கிறாய். ஏங்களுடைய கப்ரின் என்றுதான் இவ்வளவு காலமும் எண்ணி உனக்கு வந்தனம் செய்துகொண்டிருந்தோம். ஆனால் நீ கம்பெனியின் கப்ரின். அப்படியான ஒரு கப்ரினுக்கு எங்களிடத்தில் மரியாதை இல்லை’ என்றான் கலாபன்.

‘முட்டாள்ப் பயல்களே, இன்றைக்கு இவ்வளவு க~;ரத்தோடாயினும் நாம் பயணம் செய்துகொண்டிருக்கிறோமே, ஏன் தெரியுமா? பயணத் திசைப் பாகையை மாற்றாதபடியால்தான். அவ்வாறு பயணத் திசைப் பாகையை மாற்றிய வேறுவேறு கப்பல்களுக்கு என்ன நடந்தது தெரியுமா? உங்களுக்கு என்ன தெரியப் போகிறது? வேண்டுமானால் மார்க்கோனி வரும்போது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் இப்போது பயணிப்பதே ஆகக் கூடுதலான ஆபத்தற்ற வழி..’
கப்ரின் மேலே அவ்விடத்தில் தங்கவில்லை.

மறுநாள் அவர்கள் மெஸ்ஸ_க்கு சாப்பிட வந்தபோது சிறிது கடலோய்ந்திருந்தது கண்டார்கள்.
மதியவேளையில் அதுவரை தென்படாதிருந்த மார்க்கோனி வந்தான். தன்னை கப்ரின்தான் கீழே செல்லவேண்டாமெனத் தடுத்ததாகச் சொன்னான். தொடர்ந்த அவனது பேச்சிலேதான் தெரிந்தது, கப்;ரின் சொன்னதிலுள்ள உண்மை. இரண்டு கப்பல்கள் கடலுள் மூழ்கியிருக்கின்றன. அதிலொன்று எழுபத்தாறு பேர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த எம்.வி.சந்திரகுப்த என்ற இந்தியக் கப்பல். யாருக்கும் மேலே பேசவே வரவில்லை.

கண்கலங்கி அழுகிற நிலையில் நின்றுகொண்டிருந்தான் கலாபன்.

அந்தமுறை அவனெழுதிய கடிதத்தை நான் இரண்டு தடவைகள் வாசித்தேன்.

மரணத்தை, அதன் உக்கிரத்தை ஒரு நெருக்கத்திலிருந்து விளக்கியிருந்தது கடிதம். அதை இவ்வாறு முடித்திருந்தான் கலாபன்: ‘எம்.வி.சந்திரகுப்த கடலிலே தாண்டுவிட்டது என்ற செய்தி இந்தியப் பெருநாடே கடலுக்குள் மூழ்கிவிட்டதுபோன்ற அதிர்வைத் தந்தது. அத்தனைக்கு அது பல்லினத் தன்மையோடும், அவற்றின் கலாச்சாரத் தொனிப்போடும் என் பார்வைக்குப் பட்டிருந்தது. எழுபத்தாறு உயிர்கள், எழுபத்தாறு கோடி மக்களின் நாட்டில் பெரிய இழப்பில்லைத்தான். ஆனால் அந்த எழுபத்தாறு உயிர்கள் அமைத்திருந்த சூழலின் அழிவு எனக்கு ஒரு நாட்டையே இழந்திருப்பதான துக்கத்தையே செய்கிறது.’

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்