அதை அதுவாக 18

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 18


‘தனிமனிதனதும், அரசியலதும் நீதிகள் வௌ;வேறானவை.’


- தேவகாந்தன் -




(46)

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா
மேலியார்மேல் மேக பகை.
(பொருள், நட்பு, பகைமாட்சி 1) குறள் 861


தன்னினும் வலியாரோடு மாறுபாடு கொள்ளுதலைத் தவிர்க்கவேண்டும். மெலியாரோடு மாறுபாடு கொள்ளுதலை ஓம்பவேண்டும்.


நட்பு இயலில், பகைமாட்சி அதிகாரத்தில் வரும் முதலாவது குறள் இது.

நீதி, அறம் என்பதெல்லாம் எங்கும், என்றும், எல்லா வி~யங்களிலும் ஒன்றாய் இருப்பதில்லை. தனிமனித நீதியும், அரசு சார்ந்த நீதியும் ஒரே வி~யத்திலேயே பிரிந்து நின்றுதான் பேசும். யுத்தத்துக்கான நியதிகளும், யுத்த காலத்துக்கான நடைமுறை விதிகளும் பெரும்பாலும் சர்வாதிகார ஆட்சியை நிகர்த்துவிடும் ஜனநாயக நாடுகளில்கூட. இவை திருக்குறளின் காலத்திலிருந்தே நியாயப்படுத்தப்பட்டு வருவதுதான் விசித்திரம்.

அறத்துப் பாலில் அருளுடைமை என்கிற அதிகாரத்தில் வரும் கடைசிக் குறள் இது: ‘வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார் மேற்செல்லு மிடத்து.’

மெலியாரை வருத்த முன்செல்லும்போது தான் தன்னைவிட வலியார்முன் அஞ்சிநிற்கும் நிலையை ஒருவன் எண்ணிப் பார்க்கவேண்டும் என்பது இதன் பொருள்.

இது தனிமனிதர்க்கானது.

ஆனால் இதே வலியார்-மெலியார் வி~யம் அரசியலாகிறபோது விதி, தலைகீழாகி விடுகின்றது. அதைச் சொல்வதுதான் இந்தக் குறள்.

தன்னின் வலியாரோடு மாறுபாடுகொள்வதைத் தவிர்க்கவேண்டுமென்பது சரிதான். ஆனால் தன்னின் மெலியாரோடு மாறுபாடு கொள்ளவேண்டுமென்பது என்ன நியாயம்?

இதுதான் அரசியல்.

வியட்னாமியருக்கு விண்கல பரிசோதனைக்காக எச்சரிக்கை. திபெத்தினை ஆக்கிரமித்துள்ள சீனத்துடன் வியாபார மேவுகை. ஜோர்ஜ் பு~; இந்தத் திருக்குறளைத் தெரிந்திருக்கவில்லையென்று யார் நிச்சயமாகச் சொல்ல ஏலும்?



(46)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

(பொருள், நட்பு, பகைத்திறம் தெரிதல் 5) குறள் 875

தான் துணையின்றி, பகை இரண்டாய் இருக்கும்பட்சத்தில் , அவற்றிலொன்றைத் தன் துணையாகக் கொள்வதே சிறந்த தந்திரம்.

இதை, இன்றைய அரசியலின் கேடுகெட்ட தந்திரமென்று நாம் தயங்காமல் உரைப்போம். ஆனால் இதையே வள்ளுவன் சிறந்த ராஜதந்திரமாகக் கொள்ளுகிறான்.

தான் துணையில்லாமல் தனியாகவும், பகை இரண்டாகவும் இருக்கும் நிலைமையில் அப்பகையை ஒன்று சேராமல் தடுப்பது முதல் வேலையாகும். அப்போதும் பாதி வெற்றிதான் கிடைக்கும். அவற்றிலொன்றைத் தன் துணையாக்கிக் கொள்வதோ வெற்றியை நிச்சயப்படுத்தியேவிடும்.

மூவரசு, ஏகப்பட்ட குறுநில முடிகள் இருந்த பழந்தமிழகம், நிறைந்த அமைதிப் பூங்காவாய் இருந்ததென்று சொல்லச் சான்றுகளில்லை. சிறு வலிமைகளையெல்லாம் அடக்கிவைக்கவும், தீராத யுத்தங்களினால் மக்களுக்கு இன்னல் விளைவதைத் தவிர்க்கவும் வள்ளுவன் அத்தகைய யுக்தங்களைச் சொல்கிறானென்று கருதுவது நம் கருத்தை வள்ளுவன்மேல் ஏற்றும் குற்றமாகிவிடும்.

மனத்தின் அடியுணர்வுகள் ஒவ்வொன்றோடும் மனிதனை விரும்பிய புலவன், அவ் மனவுணர்வுகள் சார்ந்து அரசியலறத்தைச் சொல்லவில்லையென்பது சற்று நெருடலாகவே இருக்கிறது எனக்கு.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்