How dare you...?
தேவகாந்தன் பக்கம்:
How dare you...?
நடக்காது என்றில்லை. நடக்கும். அப்படி நடந்துவிட்டிருக்கிறது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில்.
ஓரு முகமூடி அணிந்த நபரொருவரின் திடீர்ப் பிரசன்னம்போலதான்; அது இருந்தது. அந்த நபரின் ஊசாட்டம்பற்றிய சிலபல செய்திகளைக்; கேள்விப்படத்தான் செய்திருந்தோம். இந்த முகமறைப்பு எப்போதுமே கொள்ளையின் அடையாளமில்லை. ஆசாரம், மத அடையாளம், கடுங்குளிரென்று எதுவும் காரணமாக முடியும். ஆனால் நேரில் வந்த பிறகுதான் சரியான காரணத்தைக் கண்டடைய எம்மால் முடிந்;தது. இம் மாதம் 13ம் திகதி ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற ‘அச்சத்திற்குள் வாழ்தல்’ அறிக்கை வெளியீட்டினதும் கூட்ட நிகழ்வுகளின்போதும் மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பு தமிழ் மக்கள் முன் நேரில் வந்தது குறித்த உண்மையைத்தான் இங்கு சொல்ல வருகிறேன்.
ர்ரஅயn சுiபாவள என்று தொடங்கும்போதே ருnவைநன யேவழைn ர்ரஅயn சுiபாவள அமைப்பின் முகத்திரையை அது போர்த்திக் கொள்கிறது. அதற்குமேல் றுயவஉh என்ற பதம் கண்காணிக்கும் அமைப்பு என்பதைச் சார்ந்து அதன் அர்த்தத்தைக் கொள்வதில்லை. இந்தத் தனியார் (அது பொதுவானதாக இருக்கலாம்,அது வேறு விஷயம்) அமைப்புத்தான் தமிழினத்தின் போராட்டத்தை அவமரியாதைப்படுத்திக் காட்டியிருக்கிறது. இந்த அமைப்பின் பின்னணிபற்றி முழுதாக எதுவும் எமக்குத் தெரியவரவில்லை. ஆனாலும் தேசப் பிரேமிகள் நிறுவம் என்ற பெயரிலான ஒரு பேரினவாத அமைப்பின் பின்னணியில் அது செயலாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. இது போன்ற சில இனவாத அமைப்புக்கள்தான்; 1983இன் இனக் கலவர காலத்துத் தமிழின அழிப்பில் பெரும்பங்காற்றியிருப்பதை சரித்திரம் இன்று சொல்லிநிற்கிறது. நமக்குள் இது குறித்;த எச்சரிக்கை மிகமிக அவசியம்.
அச்சத்திற்குள் வாழ்தல் என்ற நூலில் உண்மையே இல்லையென்று நிச்சயமாக நான் சொல்ல வரமாட்டேன். ஏனக்கு அது சொல்லாதுவிட்ட உண்மைகள் இன்னும் முக்கியமானவையாகத் தெரிகின்றன என்பதே இங்குள்ள பிரச்சினை. புடையில் சிறார்ச் சேர்ப்புப் பற்றிய கருத்து ஓரளவு இருக்கவே செய்கிறது என்று கொள்ளலாம். ஆனாலும் அந்த வயதானவர் என்ற வயதெல்லையை யார் வகுத்தது என்று எனக்கொரு கேள்வியிருக்கிறது. சில காலங்களுக்கு முன்னர் அந்த எல்லை 21 ஆக இருந்ததை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் 30 வயதுக்கு மேலானவர்களுக்கே அது வழங்கப்பட்டதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது எனக்கு. அந்த எல்லை இன்று வாக்குரிமைக்கு 18 ஆகவும் கல்;யாணத்துக்கு(ஆணுக்கு) 21ஆகவும் இருக்கிறது. ஓரு விஷயத்தின் வயதெல்லையை அந்த விஷயத்தின் தேவை தீர்மானிக்கிறது என்பதுதானே இதிலிருக்கிற நிஜம். இருந்தாலும் அது குற்றம்தான். ஆனால் அவ் விஷயத்தை அது விசாரணை செய்திருக்கிற முறையில் எனக்கு அதிருப்தியுண்டு. அதுவும் நிறைய. அது சுதந்திரமாகச் செயற்படவில்லை என்று கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்த ஜோ பெக்கர் சொல்லியதிலிருந்து தெளிவாகவே தெரிந்தது. செல்வமணிக்காக நிறையவே அழுதிருந்தார.; நாங்கள் கோணேஸ்வரிகளை நிறையவே கண்டவர்கள். செல்வமணிகூட கண்டிருக்க முடியும். ஜோ பெக்கர் கண்ட உண்மைகூட சரியான ஆய்வு வழியில் தெரிவிக்கப்படவில்லை. அப்பா குதிருக்குள் இல்லை என்ற கதையாகவே விஷயம் முடிந்திருக்கிறது இறுதியாக. வுpடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சார அறிக்கைபோலவே அது இருந்தது. போலக்கூட அல்ல, அதுவாகவேதான் இருந்தது. அது தன்னைக் காட்டிக்கொண்ட விதம் இதுதான்.
ஆறு மணிக்கு கூட்டம் தொடங்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரொறன்ரோ ஸ்ராரில் பக்கச் சார்பான கட்டுரை வெளியிட்டு கூட்டம் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தபோதே எனக்கு மனதுக்குள் சந்தேகம் இப்படியான கூட்டமொன்று எப்படி முடியப்போகிறதோவென்று. நான் பயந்த அப்படியேதான் நடந்திருக்கிறது. சுமார்7.00 மணிவரை கூட்டம் தொடங்க பார்வையாளர்கள் விடவில்லை. வேறு அபிப்பிராயமுள்ள வெகுவான சிலர் அங்கே இருந்தனர். இன்னும் சிலருக்கு அவர்கள் சொல்வதையும்தான் கேட்போமே என்ற கருத்துத்தான் இருந்தது. இல்லை நண்பர்களே, தமிழினம் தன் ஒன்றுபட்ட குரலை......எதிர்ப்புக் குரலை அவ்வண்ணம் காட்டியேதான் இருக்கவேண்டும். அது ஓர் எதிர்ப்புக் குரல் மட்டுமில்லை, கலகமும். கனடாவின் முன்னாள் பிரதமர் துவக்குநராக வந்திருந்தார். தன் அரசியல் வாழ்வில் அதுபோன்ற ஓரு முறையற்ற எதிர்ப்பைத் தான்; கண்டதில்லையென்றார். அவருக்கு அவ்வாறான அனுபவம் நேரக்கூடாதென்பதற்காக தமிழினம் வேறுமாதிரி நடந்திருக்க முடியாதென்பதே எனது நிலைப்பாடு. ஏங்கள் தேசத்தில் நடந்துகொண்டிருப்பது போர்.. உள்நாட்டு யுத்தம் என்று எந்தப் பெயரிலோ எவராலெல்லாமோ அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் என்னளவில் அது ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டம். இன்று நடைபெறுவது அரசியல் போராட்ட வடிவத்தைத் தாங்கியிருப்பினும் அதுவும் விடுதலைப்போராட்டமே. குறைகளோடேயெனினும் அதுவே இன்னும் என் விடுதலையின் நம்பிக்கையாகவிருக்கிறது. மிகப்பெரும்பான்மையினரின் எண்ணமும் இதுவென்பதே என் நம்பிக்கை. இத்தகைய ஒரு இனத்தின் முன் பொய்யையும் கபடத்தையும் அரங்கேற்ற வந்தார்களே. இது விடு தேங்காய். அது ஏதிரியினது கையானின் பலத்தை அறிவதற்காய்ப்; போரடியில் உருட்டிவிடப்படுவது. பலத்தைப் பார்த்துவிட்டார்கள்,சரிதான். ஆனாலும் How dare they....
000
Thanks: www.pathivukal.com
How dare you...?
நடக்காது என்றில்லை. நடக்கும். அப்படி நடந்துவிட்டிருக்கிறது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில்.
ஓரு முகமூடி அணிந்த நபரொருவரின் திடீர்ப் பிரசன்னம்போலதான்; அது இருந்தது. அந்த நபரின் ஊசாட்டம்பற்றிய சிலபல செய்திகளைக்; கேள்விப்படத்தான் செய்திருந்தோம். இந்த முகமறைப்பு எப்போதுமே கொள்ளையின் அடையாளமில்லை. ஆசாரம், மத அடையாளம், கடுங்குளிரென்று எதுவும் காரணமாக முடியும். ஆனால் நேரில் வந்த பிறகுதான் சரியான காரணத்தைக் கண்டடைய எம்மால் முடிந்;தது. இம் மாதம் 13ம் திகதி ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற ‘அச்சத்திற்குள் வாழ்தல்’ அறிக்கை வெளியீட்டினதும் கூட்ட நிகழ்வுகளின்போதும் மனித உரிமைகள் கண்காணிப்பு என்ற அமைப்பு தமிழ் மக்கள் முன் நேரில் வந்தது குறித்த உண்மையைத்தான் இங்கு சொல்ல வருகிறேன்.
ர்ரஅயn சுiபாவள என்று தொடங்கும்போதே ருnவைநன யேவழைn ர்ரஅயn சுiபாவள அமைப்பின் முகத்திரையை அது போர்த்திக் கொள்கிறது. அதற்குமேல் றுயவஉh என்ற பதம் கண்காணிக்கும் அமைப்பு என்பதைச் சார்ந்து அதன் அர்த்தத்தைக் கொள்வதில்லை. இந்தத் தனியார் (அது பொதுவானதாக இருக்கலாம்,அது வேறு விஷயம்) அமைப்புத்தான் தமிழினத்தின் போராட்டத்தை அவமரியாதைப்படுத்திக் காட்டியிருக்கிறது. இந்த அமைப்பின் பின்னணிபற்றி முழுதாக எதுவும் எமக்குத் தெரியவரவில்லை. ஆனாலும் தேசப் பிரேமிகள் நிறுவம் என்ற பெயரிலான ஒரு பேரினவாத அமைப்பின் பின்னணியில் அது செயலாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. இது போன்ற சில இனவாத அமைப்புக்கள்தான்; 1983இன் இனக் கலவர காலத்துத் தமிழின அழிப்பில் பெரும்பங்காற்றியிருப்பதை சரித்திரம் இன்று சொல்லிநிற்கிறது. நமக்குள் இது குறித்;த எச்சரிக்கை மிகமிக அவசியம்.
அச்சத்திற்குள் வாழ்தல் என்ற நூலில் உண்மையே இல்லையென்று நிச்சயமாக நான் சொல்ல வரமாட்டேன். ஏனக்கு அது சொல்லாதுவிட்ட உண்மைகள் இன்னும் முக்கியமானவையாகத் தெரிகின்றன என்பதே இங்குள்ள பிரச்சினை. புடையில் சிறார்ச் சேர்ப்புப் பற்றிய கருத்து ஓரளவு இருக்கவே செய்கிறது என்று கொள்ளலாம். ஆனாலும் அந்த வயதானவர் என்ற வயதெல்லையை யார் வகுத்தது என்று எனக்கொரு கேள்வியிருக்கிறது. சில காலங்களுக்கு முன்னர் அந்த எல்லை 21 ஆக இருந்ததை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் 30 வயதுக்கு மேலானவர்களுக்கே அது வழங்கப்பட்டதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது எனக்கு. அந்த எல்லை இன்று வாக்குரிமைக்கு 18 ஆகவும் கல்;யாணத்துக்கு(ஆணுக்கு) 21ஆகவும் இருக்கிறது. ஓரு விஷயத்தின் வயதெல்லையை அந்த விஷயத்தின் தேவை தீர்மானிக்கிறது என்பதுதானே இதிலிருக்கிற நிஜம். இருந்தாலும் அது குற்றம்தான். ஆனால் அவ் விஷயத்தை அது விசாரணை செய்திருக்கிற முறையில் எனக்கு அதிருப்தியுண்டு. அதுவும் நிறைய. அது சுதந்திரமாகச் செயற்படவில்லை என்று கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்த ஜோ பெக்கர் சொல்லியதிலிருந்து தெளிவாகவே தெரிந்தது. செல்வமணிக்காக நிறையவே அழுதிருந்தார.; நாங்கள் கோணேஸ்வரிகளை நிறையவே கண்டவர்கள். செல்வமணிகூட கண்டிருக்க முடியும். ஜோ பெக்கர் கண்ட உண்மைகூட சரியான ஆய்வு வழியில் தெரிவிக்கப்படவில்லை. அப்பா குதிருக்குள் இல்லை என்ற கதையாகவே விஷயம் முடிந்திருக்கிறது இறுதியாக. வுpடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சார அறிக்கைபோலவே அது இருந்தது. போலக்கூட அல்ல, அதுவாகவேதான் இருந்தது. அது தன்னைக் காட்டிக்கொண்ட விதம் இதுதான்.
ஆறு மணிக்கு கூட்டம் தொடங்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரொறன்ரோ ஸ்ராரில் பக்கச் சார்பான கட்டுரை வெளியிட்டு கூட்டம் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தபோதே எனக்கு மனதுக்குள் சந்தேகம் இப்படியான கூட்டமொன்று எப்படி முடியப்போகிறதோவென்று. நான் பயந்த அப்படியேதான் நடந்திருக்கிறது. சுமார்7.00 மணிவரை கூட்டம் தொடங்க பார்வையாளர்கள் விடவில்லை. வேறு அபிப்பிராயமுள்ள வெகுவான சிலர் அங்கே இருந்தனர். இன்னும் சிலருக்கு அவர்கள் சொல்வதையும்தான் கேட்போமே என்ற கருத்துத்தான் இருந்தது. இல்லை நண்பர்களே, தமிழினம் தன் ஒன்றுபட்ட குரலை......எதிர்ப்புக் குரலை அவ்வண்ணம் காட்டியேதான் இருக்கவேண்டும். அது ஓர் எதிர்ப்புக் குரல் மட்டுமில்லை, கலகமும். கனடாவின் முன்னாள் பிரதமர் துவக்குநராக வந்திருந்தார். தன் அரசியல் வாழ்வில் அதுபோன்ற ஓரு முறையற்ற எதிர்ப்பைத் தான்; கண்டதில்லையென்றார். அவருக்கு அவ்வாறான அனுபவம் நேரக்கூடாதென்பதற்காக தமிழினம் வேறுமாதிரி நடந்திருக்க முடியாதென்பதே எனது நிலைப்பாடு. ஏங்கள் தேசத்தில் நடந்துகொண்டிருப்பது போர்.. உள்நாட்டு யுத்தம் என்று எந்தப் பெயரிலோ எவராலெல்லாமோ அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் என்னளவில் அது ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டம். இன்று நடைபெறுவது அரசியல் போராட்ட வடிவத்தைத் தாங்கியிருப்பினும் அதுவும் விடுதலைப்போராட்டமே. குறைகளோடேயெனினும் அதுவே இன்னும் என் விடுதலையின் நம்பிக்கையாகவிருக்கிறது. மிகப்பெரும்பான்மையினரின் எண்ணமும் இதுவென்பதே என் நம்பிக்கை. இத்தகைய ஒரு இனத்தின் முன் பொய்யையும் கபடத்தையும் அரங்கேற்ற வந்தார்களே. இது விடு தேங்காய். அது ஏதிரியினது கையானின் பலத்தை அறிவதற்காய்ப்; போரடியில் உருட்டிவிடப்படுவது. பலத்தைப் பார்த்துவிட்டார்கள்,சரிதான். ஆனாலும் How dare they....
000
Thanks: www.pathivukal.com
Comments